• English
  • हिन्दी में
Logo

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி
முதன்மை தலைமை ஆணையரின் அலுவலகம்

தமிழ்நாடு & புதுச்சேரி மண்டலம்

வருவாய் துறை, நிதி அமைச்சரகம், இந்திய அரசு

  • facebook icon
  • Twitter icon
  • youtube icon
finance minister nirmala
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • நோக்கம் மற்றும் பணி
    • நிறுவன கட்டமைப்பு
  • அதிகார வரம்பு
    • அதிகார வரம்பு வரைபடம்
    • அதிகார வரம்பு ஆணை
    • திருத்தங்கள்
    • முதன்மை தலைமை ஆணையரின் நிர்வாகக் கட்டுப்பாடு
  • ஜிஎஸ்டி
    • சட்டம்
    • விதிகள்
    • அறிவிப்புகள்
    • சுற்றறிக்கைகள்
    • முன்கூட்டிய தீர்ப்பு
    • ஜிஎஸ்டி வர்த்தக அறிவிப்புகள்
    • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • மத்திய கலால்
    • மத்திய கலால் வர்த்தக அறிவிப்புகள்
    • சட்டங்கள் மற்றும் விதிகள்
  • சேவை வரி
    • சட்டங்கள் மற்றும் விதிகள்
  • துறை அதிகாரிகள்
    • நிறுவன நிர்வாக சுற்றறிக்கைகள் மற்றும் உத்தரவுகள்
      • தலைமை மண்டல அதிகாரி - நிர்வாகம்
      • தலைமை ஆணையர்கள் அதிகாரம் - ஸ்தாபனம் மற்றும் இதர
      • தலைமை ஆணையர் அலுவலகம் -ஸ்தாபனம் மற்றும் இதர
    • மூப்பு பட்டியல்
    • எம்எசீபி
    • பதவி உயர்வு / வேலை நியமனம் / பணிமாற்ற உத்தரவுகள்
    • விளையாட்டு ஒதுக்கீடு உத்தரவுகள்
    • பிரதிநிதித்துவம்
    • கண்காணிப்பு
    • நலத்துறை
    • துறைசார் தேர்வு
    • ஆலோசனைகள் - டி.ஜி.எஸ்
    • விடுமுறை பட்டியல்
    • விளையாட்டு மற்றும் கலாச்சாரம்
  • செய்தி / ஊடகங்கள்
    • செய்தி வெளியீடு
    • புகைப்பட தொகுப்பு
    • காணொளி தொகுப்பு
  • ஹிந்தி பிரிவு
  • பதிவிறக்கங்கள்
    • எஃப் ஏ க்யூ கள்
    • பி பி டி கள்
    • இ ஃபிளையர்கள்
  • தொடர்புக்கு
NEWS
  • 04/11/2023 - Advisory for Pilot Project of Biometric-Based Aadhaar Authentication and Document Verification for GST Registration Applicants of Gujarat and Puducherry
  • 14/11/2023 - ITC Reversal on Account of Rule 37(A)
  • 14/11/2023 - Advisory for Online Compliance Pertaining to ITC mismatch -GST DRC-01C
  • 17/11/2023 - Comprehensive Guide and Instructions for Direct API Integration with Any of the 6 IRPs for E-Invoice Reporting
  • 28/11/2023 - Advisory for the procedures and provisions related to the amnesty for taxpayers who missed the appeal filing deadline for the orders passed on or before March 31, 2023
  • 01/12/2023 - Advisory for Pilot Project of Biometric-Based Aadhaar Authentication and Document Verification for GST Registration Applicants of Andhra Pradesh
  • 01/12/2023 - Advisory: Two-factor Authentication for Taxpayers
View all
எங்களைப் பற்றி

நோக்கம்

தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மறைமுக வரிகளை வசூலிப்பதற்கான திறமையான மற்றும் வெளிப்படையான பொறிமுறையை வழங்குவதே எங்கள் நோக்கம்.

பணி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துவதில் சிறந்து விளங்குவதன் பொருட்டு கீழ்கண்ட பணிகளை மேற்கொள்ளல்லே எங்கள் நோக்கம் ஆகும்:

  1. வருவாயை நியாயமான, சமமான, வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் சேகரித்தல் / கொள்முதல்
  2. அரசாங்கத்தின் பொருளாதார, வரிவிதிப்பு மற்றும் வர்த்தகக் கொள்கைகளை நடைமுறை ரீதியில் நிர்வகித்தல்
  3. சீராக்கல் மற்றும் எளிமைப்படுத்துவதன் மூலம் ஜிஎஸ்டி செயல்முறைகளை வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு எளிதாக்குதல் மற்றும் இந்திய வணிகத்தின் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவுதல்
  4. தகவல் மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் தன்னார்வ இணக்கத்திற்கான சூழலை உருவாக்குதல்
  5. வருவாய் ஏய்ப்பு, வணிக மோசடிகள் மற்றும் சமூக அச்சுறுத்தலை எதிர்த்தல்
  6. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு துணை புரிதல்

மூலோபாயம்

எங்கள் பணியை அடைவதற்கான மூலோபாயம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

  1. செயல்பாடுகளை அளவுகோலில் தரப்படுத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல்
  2. தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்துதல்
  3. இடர் மேலாண்மை, ஊடுருவாத ஆய்வுகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற வாடிக்கையார்களுக்கு எளிமையாக்குதல் போன்ற நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி ஜிஎஸ்டி நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல்
  4. பிற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டுறவு முயற்சிகளை உருவாக்குதல் மற்றும் வர்த்தகம், தொழில் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கூட்டு பங்காண்மையை உருவாக்குதல்
  5. சேவை வழங்கல் தரநிலைகளுக்கு இணங்குவதை அளவிடுதல்
  6. திறன் மேம்பாட்டின் மூலம் நிபுணத்துவத்தை வளர்ப்பது

முக்கிய செயல்பாடுகள் மற்றும் சேவைகள்

ஒழுங்குமுறை செயல்பாடுகள்

  1. ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் வசூல்
  2. ஜிஎஸ்டியின் வரம்பிற்கு உட்பட்டவர்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு
  3. திணைக்களத்தில் செய்யப்பட்ட அறிவிப்புகள் மற்றும் வரி அறிக்கை தாக்கல்களை பெருதல் மற்றும் ஆய்வு செய்தல்
  4. கடத்தலைத் தடுத்தல் மற்றும் வரி ஏய்ப்பை எதிர்த்துப் போராடுதல்
  5. நிர்வாக மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பது
  6. வரி திருப்பிச் கொடுத்தல் மற்றும் வரி தள்ளுபடிக்கான அனுமதி
  7. வருவாய் நிலுவைகளை வசூலித்தல்

சேவை செயல்பாடுகள்

  1. மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் சட்டம் மற்றும் நடைமுறைகள் பற்றிய தகவல்களை பரப்புதல்
  2. ஆன்லைன் சேவைகள் மூலம் அறிவிப்புகள், வரி அறிக்கைகள் மற்றும் உரிமை கோரல்களை தாக்கல் செய்ய வழி வகை செய்தல்
  3. அறிவிப்புகள், , வரி அறிக்கை மற்றும் உரிமைகோரல்களின் செயலாக்கத்தின் நிலை பற்றிய தகவலை வழங்குதல்
  4. உரிமைதாரர்களுக்கு அவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதில் உதவுதல்
  5. ஜிஎஸ்டி வரி விவகாரங்கள் தொடர்பான பொது விசாரணைகளுக்கு பதிலளித்தல்

எதிர்பார்ப்புகள்

குடிமக்களாகிய உங்களியிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால் :

  1. நாட்டின் சட்டங்களை நிலைநிறுத்தி மதிக்கவும்
  2. அனைத்து வரிப் பொறுப்புகளையும் தானாக முன்வந்து செலுத்தவும்
  3. சட்டப்பூர்வ கடமைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றவும்
  4. தகவல்களை வழங்குவதில் நேர்மையாக இருக்கவும்
  5. விசாரணைகள் மற்றும் சரிபார்ப்புகளில் ஒத்துழைப்பாகவும் வெளிப்படையாகவும் இருக்கவும்
  6. தேவையற்ற வழக்குகளைத் தவிர்க்கவும்
  7. வரி நிலுவைத் தொகையை செலுத்தவும்

இவை எங்களுக்கு சேவைகளை திறம்பட மற்றும் திறமையான முறையில் வழங்க உதவும்

எங்கள் சேவைகளில் பின்வரும் நேர விதிமுறைகளைப் பின்பற்றுவோம் [குடிமக்கள் சாசனத்தின் படி]:

  1. அறிவிப்புகள், விண்ணப்பங்கள் மற்றும் வரி அறிக்கை தாக்கல் உட்பட அனைத்து எழுத்துப்பூர்வ தகவல் தொடர்புகளையும் உடனடியாக அல்லது கண்டிப்பாக 7 வேலை நாட்களுக்குள் அவை பெற பெற்றத்திற்கான ஒப்புதல் தருதல்
  2. அறிவிப்பு அல்லது வரி கணிப்பு தொடர்பான விஷயங்களில் முடிவை முன்கூட்டியே அல்லது எந்த சந்தர்ப்பத்திலும் பெறப்பட்ட 15 வேலை நாட்களுக்குள் தெரியப்படுத்துதல்
  3. வரி திரும்பத் கொடுத்தல் தொடர்பான உரிமைகோரலை அவை முழுமையாக பெறப் பெற்ற 3 மாதங்களுக்குள் முடித்தல்
  4. முழுமையான விண்ணப்பத்தைப் பெற்ற 7 வேலை நாட்களுக்குள் பதிவு முறைகளை முடித்தல்
  5. வரி செலுத்துவோரின் பதிவேடுகளை ஆய்வு செய்வதற்கு முன் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தல்
  6. ஷோ காஸ் நோட்டீஸ் வழங்குவதற்கு தேவையற்ற கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, அந்த நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், சட்டத்தின் கீழ் வேறுவிதமாக வழங்காத பட்சத்தில், அவற்றை திருப்பி தருதல்
  7. மற்ற நடவடிக்கைகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட நேர விதிமுறைகளும் கடைபிடிக்கப்படும். மேற்கூறிய நேர நெறிமுறைகளில் குறைந்தபட்சம் 80% இணக்க நிலையை அடைய முயற்சிப்போம். நெருக்கமான கண்காணிப்பு, செயல்முறைகளின் தரப்படுத்தல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இணக்க நிலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.
  • தனியுரிமைக் கொள்கை
  • பொறுப்பு துறப்பு
  • இணையதள வரைபடம்
  • கி அச் தி டாக்டர்

© 2021-22 Designed by Hourglass IT

Total Visitors : visitor counter